வெள்ளி, 16 ஜனவரி, 2009

கடலை கருப்புவின் நகைச்சுவை





கடலை
கருப்பையா என்று ஒருவர் எங்கள் காலேஜில் அறியாதவர் யாருமில்லை ( அதாவது எங்கள் மின்னணுவியல் பிரிவில் ) . பெயர் காரணம் பற்றி நாங்கள் விளக்கவேண்டிய அவசியம் இல்லை. கடலைகளை இவன் எப்பவுமே மூட்டை மூட்டையாக வருத்து வந்தவன். எனக்கு தெரிந்து இன்னும் பல மூட்டைகளை முது நிலை படிப்பிலும் வறுத்து வருகிறான் என மற்ற நண்பர்கள் புகார் கூறியவண்ணம் இருக்கிறார்கள். என்ன தண்டனை தருவதென்று தெரியவில்லை.


சரி அதெல்லாம் இருக்கட்டும் . நினைவில் நீங்க இடம் பெற்ற ஒரு சில காட்சிகளை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

அது நான்காம் பருவத்தின் மத்திய நாட்கள். நாட்டு நலப்பணி திட்டத்தில் எங்கள் மின்னணுவியல் மாணவர்களும், வணிகவியல் மாணவர்களும், பொருளியல் மாணவர்களும் ராஜகோபாலன் பட்டியில் சில பணிகளை ( அட , புதர்களை நீக்குவது, பாதை அமைப்பது ) செய்து வந்தோம் . ஐந்து மணி நேரம் இந்த உருப்படியான வேலைகளையும் மற்ற நேரம் வம்பில்லுக்கும் வேலைகளையும் செவ்வனே செய்து வந்தோம். தினமும் வேலை முடிந்ததும் கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம். அப்படி ஒரு நாள் நான் முதலில் தவ்வ, பின் உடனே நமது டலை தவ்வ , எச்சரிக்கை செய்ததால் உடனே வேகமாக நீந்தி வேறிடம் போய்விட்டேன். ஆனால் கருப்பு உள்ளே தவ்வி உள்நீச்சலில் பாய்ந்து வந்து கொண்டு இருந்தான். திடீரென மேலேழுந்தவன் அம்மா என கத்திக்கொண்டு உள்ளே சென்றான். என் நண்பர் சிலர் உடனே பாய்ந்து கடலையை மீட்டு கிணற்று மேட்டுக்கு கொண்டு சென்றனர். தலையில் ரத்தம் வர நாங்கள் பயந்து விட்டோம் . கருப்பு வேறு கத்தி ஆர்பாட்டம் செய்து கொண்டு இருந்தான் . என்னவோ முனகுவது போல் சத்தம் குறைத்து தலையில் வழிந்த ரத்தம் பார்த்து கூவிக்கொண்டு இருந்தான். நான் சற்று குனிந்து அவன் வாயருகே என்காதினை கொண்டு சென்றபோது " இம் இம் இம் முத்து வையும் " என்ற இந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான். முத்து என்பது இந்த கடலையின் வாணலி. ரெண்டு பெரும் கதையளக்க ஆரம்பித்தால், மற்றவர்களெல்லாம் துண்ட காணோம் துணிய காணோம் என தெறித்து ஓடிவிடுவர். ( முத்து என்பது எங்கள் பெண் தோழி)


"ஏண்டா நாயே நாங்களே பயந்து போயி இருக்கோம் நீ என்னடான்னா, முத்து வையும் , கொத்திப்போடும் னு எண்டா கழுத்தறுக்கிற என ஆளாளுக்கு முதுகில் அவனுக்கு தாளம் வாசிக்க, மெதுவாய் மிதிவண்டியில் தள்ளிக்கொண்டு போனார்கள் கடலையை. அந்த நேரத்தில் கூட கடலை எந்த அளவுக்கு கழுத்தறுக்கிற மாதிரி இருக்கிறான் என நாங்கள் நொந்து கொண்டோம் . மருத்துவ மனையில் அதைவிட கொடுமை நடந்து விட்டது என உடனே எங்கள் ஆசிரியருடன் வரச்சொல்லி, கடலையுடன் போனவன் அலைபேசி மூலம் தகவல் அளித்தான். என்னவோ ஏதோவென எங்களின் வானரப்படையுடன் மருத்துவமனையை அடைந்தார் எங்கள் நா.. தி ஒருங்கிணைப்பாளர்.

அங்கெ இருந்த செவிலியர், இது எதோ கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதால் வந்த விளைவே என்று வாதாடிக்கொண்டு இருந்தார், எனவே போலீஸ் வசம் செல்லுமாறு சொல்லிக்கொண்டு இருந்தார். ஒருங்கிணைப்பாளர் கடலை கிணற்றி உள்ள ஒரு ஊசியான கல்லில் மோதிய விளைவே இது என்றும் . யாரும் கடலையை தாக்க வில்லை என்று மன்றாடிய பின்னரே , கடலைக்கு தையல் போடப்பட்டது. இத்தனை சாக்காக வைத்து கொண்டு முகாமில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக திரிந்தான் நமது கடலை.


முகாம் பயிற்சி முடிந்து கல்லூரி திரும்பியது முதல், எங்கள் எச். .டி ஏனிந்த காயம் என கேட்க கடலைமேல் இருந்த வெறுப்பில் எங்கள் நண்பன் ஒருவன் "போன இடத்துல வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதானே ஒரு கிழவிகிட்ட எடக்குபெசிக்கிட்டு இருந்தான் அதான் கிழவி பித்தளை பானையை வச்சு கடலை தலை மேல போட்டுருச்சு" அதான் இந்த விளைவு என மற்ற மாணவர்களும் ஆமோதிக்க கடலைக்கு பயங்கர கடுப்பில் எதிர்த்து பேச முடியாது இருந்தான்.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

டஸ் என்று ஒருவன்


டஸ் பற்றி பதிவு போட வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணருகின்றேன். நீங்கள்
டஸ் என்றால் என்ன என்று இப்படி அவனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
டஸ் சராசரி மாணவன் ( அதாவது முப்பாது ஐந்து முதல் நாற்பது வரை) மதிப்பெண்களில் உலா வருபவன். நான் சொல்வதை சற்று கற்பனை செய்து பார்த்து விட்டால் அவனை நீங்கள் கண்டு விடலாம். நல்ல சிகப்பு நிறம் தட்ட குச்சியை விட சற்று பருமனான தேகம். பந்தா பண்ணுவது என்றால் என்னவென்ற தெரியாத அப்பாவி பிள்ளை (உண்மையிலே அவனுக்கு பந்தா பண்ணுவது என்றால் என்ன வென்றே தெரியாது )

நாங்கள் சப்பை பிகரு முன்னால கூட அலம்பல் பண்ணிதிரியும் போது அவன் யாரையும் ஏறடுத்து பார் பார்ப்பதில்லை ஏன் என்று எங்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை தெரியவில்லை. பள்ளி காலங்களின் இந்த கூத்து அரங்கேறும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் ஏமாந்தாலும் மறுபடியும் அந்த காரியத்தையே செய்வதால் எங்களுக்கு ஒருபோதும் அலுப்பதில்லை. அந்த காரியம் என்னவென்றால். பள்ளி காலங்களில் கடைசி பாட வேளைகளில் பெரும்பாலும் ஆசிரியர் வருவது இல்லை. டஸ் குறட்டையுடன் தூங்கிக்கொண்டு இருப்பான். அந்த வேளைகளில் நமது டிஸ் ( கேபிள் காரன்) அல்லது அவனது சகாவான மூக்கன் "டே டஸ் ஸ்கூல் விட்டாச்சு" என காதில் சொல்லுவார்கள் , உடனே யாராவது போகிறார்களா இல்லையா எனக்கூட பார்க்காது அவனுடைய பையை தூக்கிக்கொண்டு ஒடி விடுவான் . பாதி ஸ்கூலை iவிட்டு நூறு மீட்டர் வந்த பிறகுதான் அவனுக்கு புத்தி வரும் . கடுப்புடன் திரும்பி வந்து காரணமானவர்களை திட்டுவான்.

ஒருநாள், தலைமை ஆசிரியர் கண்ணில் இந்த காட்சி பட்டு தொலைக்க உடனே அவனை கூப்பிட்டு கண்டித்தார். காய்ந்த கேசரி ஜெகதீசனுக்கும் ( டஸ் தோழன்) டிஸ்க்கும் சண்டை வந்து இருக்கும் போது சில வாக்கியங்கள் கலவரத்தை தூண்ட கூடிய முறயில் அமைந்து இருக்கும்,

" உங்க கடை கேசரி எனக்கு பனியன் தைக்க ஆகிவிட்டது"
" உங்க கடை போண்டா கல்லு போல அடிவிழது"
"தோசை யை என் தம்பி பஸ் ஒட்டி விளையாடுறான்"

" உங்க கேபிள் விழுந்து ஊர்ல நாலு பேருக்கு கண்ணு போச்சு"

"கிழவிகள் உங்க tv யை பார்த்து மண்டைய போட்டு விட்டது"

(காஞ்ச கேசரி ஜெகதீசன் டஸ் இன் தீவிரமான நண்பன்)

இப்படி பல வழிகளில் டஸ் இன் புகழ் பரவி அதில் இந்த காஞ்ச கேசரி ஜெகதீசனும் முன்னால் சொன்னவனும் பலமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள், இவர்கள் இப்படி என்றால் பாழப்போன இந்த எக்ஸாம் வந்து அவனவன் படிப்பு நாறிக்கொண்டு இருக்கும் . படிப்பவர் பக்கம் நம்ம கோஸ்டி மொத்த மாக சாயும். ஆனால் என்ன செய்வது இதில் டஸ் மட்டும் படித்து பாசாகிவிடுவான். மத பய புள்ளைக வழக்கம் போல ஆங்கிலத்திலும் கணக்கிலும் பெயிலாகி முழித்துக்கொண்டு இருப்பார். என்ன செய்வது ஆசிரியர் பின்பக்கத்தில் தூசி முழுவதும் போகும் அளவுக்கும் ஒரு இன்ச் வீங்கும் அளவுக்கும் நொச்சி குச்சியால் பின்னி பெடலெடுத்து விடுவார். அப்போது தான் டஸ் க்கு வாழ்நாளின் பிறப்பின் பயன் அடைவான்

சனி, 20 டிசம்பர், 2008

குட்டியானையின் அபாரம்


யானைக்குட்டி மச்சான் ( .முருகன்) பற்றி கட்டாயம் தெரிந்து வேண்டும். தன்னுடைய கால் கட்டைவிரலை கூட தன்னால் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி. யானை குட்டி என்றும் குட்டி யானை என்றும் அன்புடன் அழைக்கப்படுகின்ற நமது . முருகன் என்போரை தெரிந்து கொள்ளவில்லையாயின் வாழ்வின் பயனை நீங்கள் தொலைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

கைப்பிள்ள ரகத்தை சேர்ந்தவன். யாருமே அடிவாங்கி இருக்காத இடத்தில் கூட தாட்டியமாய் நின்று பல பேச்சுகளை பேசி முதுகிலோ வேறு எங்கே யோ பல பரிசுகளை வாங்கி குவித்துக்கொண்டு இருப்பான். ஆளுதான் அப்படியே தவிர குட்டி யானை யார் என்ன சொன்னாலும் எங்களிடம் உண்மையா பொய்யா என்று யோசித்து கூட பார்க்காமல் எங்களிடம் கூறி பல தடவை மூக்குடைந்து போனாலும் கடமையே கண்கண்ட தெய்வமாக அதனையே சிரமேற்கொண்டு செய்து வந்தான் .

சொல்லுவதெல்லாம் பொய் பொய்யைத்தவிர வேறு ஒன்றுமில்லை என பிறக்கும் போதே சபதம் எடுத்து வந்து இருப்பான் போல( பல பொய்களை, புளுகு களை கூசாமல் பேசுவதில் கலைஞன் உதாரணமாக வல்லரசு படம் மதுரை மாவட்டத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய்க்கு ஓடியது என கூறும் அவனின் உண்மை தன்மை )

பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் லேப்இல் நிறமாலைமானி என்று ஒன்று உண்டு . இயற்பியல் ஆசிரியர் அதனை சரி செய்து வைத்து விட்டு அளவீடு மட்டும் எடுத்துக்கொள்ளும்படி அந்த குழுவிற்கு கூறி இருந்தார். யானைக்குட்டி தான் அந்த குழுவில் லீடர் போல இருந்தான் . அளவீடுகளை எடுக்கும் முன்னர் அந்த கருவியின் போகசினை மாற்றி விட்டான். அளவீடுகள் எல்லாமே தவறாகவே காட்டி இருக்கிறது என அந்த ஆசிரியரிடமும் கூறி விட்டான் . அந்த ஆசிரியர் இதுவரை மாணக்கரை திட்டியது கூட இல்லை ஆனால் நமது குட்டி செய்த கைங்கர்யத்தால் அந்த கருவி சிறிது பழுதடைந்து விட்டது அவ்வளவுதான் யானை முதுகில் கடம் வாசித்து விட்டார். அன்றில் இருந்து அந்த ஆசிரியர மீது கடும் சினத்துடன் இருந்து வருகிறான்.
வேதியியல் லேபில் ஆசிரியர் அளவு கொடுத்த கணக்கை செய்யாமல் இவனாக ஒரு அளவு கண்டறிந்து அதனை அதனை ஆசிரியரிடம் கூறுகையில் அவன் கன்னம் பழுது பார்க்கப்பட்டது.

இப்படி எவ்வளவோ செய்து, வங்கி இருந்தாலும். அப்படியும் சுட்டு போட்டாலும் உண்மை வராது. இந்த லட்சணத்தில் கல்லூரி கலங்களில் யாரோ செய்த தவறுக்காக யானை அந்த கூட்டத்துடன் சேர்ந்து இருந்த ஒரே காரணத்தால் ஒரு மாத காலம் நீக்கப்பட்டு தியாகி என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

பந்தா பண்ணுவதில் குட்டிக்கு நிகர் குட்டி தான், சப்ப மேட்டருக்கெல்லாம் ஓவரை சீன் போட்டு மூக்குடைந்து போவதில் மன்னனாய் இருந்தான். இதனாலோ என்னவோ இவன் புகழ் மங்காமல் உலகில் ஒளிவீசுகிறது .