சனி, 20 டிசம்பர், 2008

குட்டியானையின் அபாரம்


யானைக்குட்டி மச்சான் ( .முருகன்) பற்றி கட்டாயம் தெரிந்து வேண்டும். தன்னுடைய கால் கட்டைவிரலை கூட தன்னால் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி. யானை குட்டி என்றும் குட்டி யானை என்றும் அன்புடன் அழைக்கப்படுகின்ற நமது . முருகன் என்போரை தெரிந்து கொள்ளவில்லையாயின் வாழ்வின் பயனை நீங்கள் தொலைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

கைப்பிள்ள ரகத்தை சேர்ந்தவன். யாருமே அடிவாங்கி இருக்காத இடத்தில் கூட தாட்டியமாய் நின்று பல பேச்சுகளை பேசி முதுகிலோ வேறு எங்கே யோ பல பரிசுகளை வாங்கி குவித்துக்கொண்டு இருப்பான். ஆளுதான் அப்படியே தவிர குட்டி யானை யார் என்ன சொன்னாலும் எங்களிடம் உண்மையா பொய்யா என்று யோசித்து கூட பார்க்காமல் எங்களிடம் கூறி பல தடவை மூக்குடைந்து போனாலும் கடமையே கண்கண்ட தெய்வமாக அதனையே சிரமேற்கொண்டு செய்து வந்தான் .

சொல்லுவதெல்லாம் பொய் பொய்யைத்தவிர வேறு ஒன்றுமில்லை என பிறக்கும் போதே சபதம் எடுத்து வந்து இருப்பான் போல( பல பொய்களை, புளுகு களை கூசாமல் பேசுவதில் கலைஞன் உதாரணமாக வல்லரசு படம் மதுரை மாவட்டத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய்க்கு ஓடியது என கூறும் அவனின் உண்மை தன்மை )

பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் லேப்இல் நிறமாலைமானி என்று ஒன்று உண்டு . இயற்பியல் ஆசிரியர் அதனை சரி செய்து வைத்து விட்டு அளவீடு மட்டும் எடுத்துக்கொள்ளும்படி அந்த குழுவிற்கு கூறி இருந்தார். யானைக்குட்டி தான் அந்த குழுவில் லீடர் போல இருந்தான் . அளவீடுகளை எடுக்கும் முன்னர் அந்த கருவியின் போகசினை மாற்றி விட்டான். அளவீடுகள் எல்லாமே தவறாகவே காட்டி இருக்கிறது என அந்த ஆசிரியரிடமும் கூறி விட்டான் . அந்த ஆசிரியர் இதுவரை மாணக்கரை திட்டியது கூட இல்லை ஆனால் நமது குட்டி செய்த கைங்கர்யத்தால் அந்த கருவி சிறிது பழுதடைந்து விட்டது அவ்வளவுதான் யானை முதுகில் கடம் வாசித்து விட்டார். அன்றில் இருந்து அந்த ஆசிரியர மீது கடும் சினத்துடன் இருந்து வருகிறான்.
வேதியியல் லேபில் ஆசிரியர் அளவு கொடுத்த கணக்கை செய்யாமல் இவனாக ஒரு அளவு கண்டறிந்து அதனை அதனை ஆசிரியரிடம் கூறுகையில் அவன் கன்னம் பழுது பார்க்கப்பட்டது.

இப்படி எவ்வளவோ செய்து, வங்கி இருந்தாலும். அப்படியும் சுட்டு போட்டாலும் உண்மை வராது. இந்த லட்சணத்தில் கல்லூரி கலங்களில் யாரோ செய்த தவறுக்காக யானை அந்த கூட்டத்துடன் சேர்ந்து இருந்த ஒரே காரணத்தால் ஒரு மாத காலம் நீக்கப்பட்டு தியாகி என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

பந்தா பண்ணுவதில் குட்டிக்கு நிகர் குட்டி தான், சப்ப மேட்டருக்கெல்லாம் ஓவரை சீன் போட்டு மூக்குடைந்து போவதில் மன்னனாய் இருந்தான். இதனாலோ என்னவோ இவன் புகழ் மங்காமல் உலகில் ஒளிவீசுகிறது .


2 கருத்துகள்:

அ.மு.செய்யது சொன்னது…

நல்ல நகைச்சுவை நெடி...( காமெடிக்கு தமிழ்ப் பெயர் )நெடி இன்னும் வெடிக்கட்டும்.

Keep the same momentum and continue the good work...!!!!!!

Che Kaliraj சொன்னது…

//நல்ல நகைச்சுவை நெடி...( காமெடிக்கு தமிழ்ப் பெயர் )நெடி இன்னும் வெடிக்கட்டும்.//

தங்கள் வரவுக்கு நன்றி . தமிழ் கற்றுக்கொடுத்தமைக்கு மிக நன்றி.