திங்கள், 15 டிசம்பர், 2008

முட்டைகண்ணு கணேசனின் பதில்கள்

காலாண்டு ஒரு பாவச்செயல்
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

இந்த அரபரிச்சை (அரையாண்டு தேர்வு ) ஏன்தான் வருகிறதோ என்று எல்லோரும் தத்தம் பாசையில் புலம்பிய காலங்களில், அதாவது என்னை போல சராசரிக்கும் கீழ உள்ள மாணவர்களை மிகவும் பதம் பார்க்கும் தேர்வுகளில் ஒன்று இந்த அரையாண்டு அரக்கன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணேசன் என்றவன் நண்பனாக இருந்தான். முட்டைகண்ணு கணேசன் என்ற பட்டம் கொண்டு இருந்தான். ஆளு பார்க்கவே காமெடியாய் இருப்பான். இந்த லட்சணத்தில் குரல் வேறு மிக பிரமாதமாக இருக்கும். கருப்பசாமி குத்தகை காரர் படத்தில் வரும் "யங்க மின்கன் " போன்ற குரல். ஆளு நிதானமாய் பேசினால் கேட்க கூடியாதாயும், அவசரமாக பேசினால் மேற்கூறிய முறைப்படியும் இருக்கும். ஆதலால் பல புனைபெயர்கள் கொத்து கொத்தாக அவனை சரணடைந்த வண்ணம் இருந்தன.

பெயருக்கு ஏற்றது போல தொந்தியும் கூடவே இருக்கும் ( தும்பிக்கையும் எலியும் இல்லை ). அரையாண்டில் இருந்து அவனுக்கு பிடித்து சனியன். அறிவியல் சமூகவியல் பாடங்களில் நாங்கள் சும்மாவே முப்பத்தி ஐந்து எடுக்க பகீரத பிரதானம் எடுப்போம். என்ன செய்யலாம் என வெங்கு விடம் கேட்டோம் ( வெங்கு தான் அப்போது லீடெர்)
"அடுச்சு விடுவேன் மார்க்கு போடுவார்கள் "என ரகசியத்தை போட்டு உடைத்தான்.

நாங்கள் அதனை சீரியசாக எடுக்காமல் எதோ தெரிந்ததை எழுதி விட்டு மாற்ற வைகளை விட்டு விட்டு வந்து சேர. முட்ட கண்ணு மச்சான் மட்டும் நிறைய எழுதியிருக்கிறதை தம்பட்டம் அடித்து கொண்டு இருந்தான் . எங்களுக்கு அடிவயிற்றில் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது.

திருத்திய பேப்பர்கள் வர ஆரம்பித்தன, பயம் தொண்டையில் சேர் போட்டு அமர்ந்தது. வழக்கம் போ சயின்ஸ் வாத்தியார் நடராஜன் (சமூகவியலுக்கு மட்டுமே எங்களுக்கு வந்தார்) முன்னோட்டத்துடன் ஆரம்பித்தார். டேய் உங்க பேப்பர திருத்தும் போது போற வாற சார்களெல்லாம் ஒருமாதிரியாய் பார்த்து விட்டது போறாங்க. நானா சிறுச்சுகிட்டு இருக்கேன். என்ன செய்ய அந்தமாதிரி எழுதி இருக்கிறீங்க. அவன் யாருன்னு நான் பாத்தாகணும்" அப்பிடீன்னு சொல்லிட்டு நம்பர் சொல்லிட்டு பேப்பர் குடுக்க ஆரம்பிச்ச பின்னாடி, நம்ம முட்ட கண்ணு மச்சான் பேப்பர் வரும்போது. வாடா நீதான அது ?

மாவீரர் பத்தி எழுத சொன்ன இந்த நாயே என்ன எழுதி இருக்குன்னு பாருங்க படி அந்த கேள்விய நீ எழுதுன பதிலோட சேர்த்து . வாசிக்க ஆரம்பித்தான்


" மகாவீரர் ஒரு பெரிய வீரர். ஒரு சமயம் காட்டுக்கு சென்று மன்னரை காப்பாற்றினார். அவர் பல பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியவர். எனவே அவர் மகாவீரர் என அழைக்க படுகிறார்."

அடி விழா ஆரம்பமானது. டவுசரின் தூசி பறக்க பறக்க வெளுக்க ஆரம்பித்தார் அவனை. மாவீரர் என்ற பட்ட பெயரும் ஒட்டிக்கொண்டது.

அடுத்த பீரிடு அறிவியல், தமிழரசி வந்தார் (எங்கள் அறிவியல் ஆசிரியை). ஏற்கனவே நம் முட்ட கண்ணு விழி பிதுங்கி கண்ணீர் குளத்தில் நீந்தி இப்போது தான் கரைஎறி இருக்கான் . அதற்குள் அடுத்த வினை ஆரம்பமானது கொழுப்பு பற்றிய கேள்வியை " கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கு வயிறு வீங்கி குண்டாக இருக்கும் வயிற்றில் ஒரு குத்து விட்டால் அழுது விடுவார்கள் " என பதில் எழுதி இருந்தான் நம்ம ஆளு . அப்போது அடின்னாலும் அடி அப்படி ஒரு அடி . முழுதாய் வெளுத்து வாங்கப்பட்டு வந்து சேர்ந்தான்.

இப்படி அடிபட்டு அடிபட்டே படிக்க இயலாமல் தன்னுடைய மாணவர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு வேலைக்கு அந்த ஆண்டிலேயே போய்விட்டான்

2 கருத்துகள்:

அ.மு.செய்யது சொன்னது…

கனாக் கானும் காலங்கள் அருமை !!!!!

இன்னும் கொளுத்திப் போடுங்க !!!

Che Kaliraj சொன்னது…

வாருங்கள் அ.மு.செய்யது தோழரே பல விசயங்களில், பல நேரங்களில் அடிவாங்கிய, வாய்த்த நண்பர்களின் குழாம் நிகழ்வுகளை மற்றவர் அறிய சித்தம் கொண்டு உள்ளேன்.

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. தங்கள் யோசனையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவேன்